ஞாயிறு, செப்டம்பர் 11, 2011



قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِ مِنَ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَن ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ

28: 78. ''என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். ''இவனை விட அதிக வரிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். 


அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்த அந்த மூவரும்


அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில் ஒரு வெண்தோல் உடையவர், ஒரு வழுக்கைத்தலையுடையவர், ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் (முதலில்) வெண்தோல் நோயுடையவரிடம் வந்து , உமக்கு மிக உவப்பானது எது என வினவினார் ? அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல் (மக்கள் அறுவெறுக்கும் வெண் தோல்) என்னை விட்டுப் போய் விட வேண்டும் எனக் கோறினார்.

அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அவரது அறுவெறுப்பான நிறம் போய் விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் உவப்பானது ? என அம்மலக்கு அவரிடம் வினவினார். அவர் ஒட்டகை வேண்டும் எனக்கூறவே , அவருக்கு ஒரு சினை ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக ! என ( அவருக்கு ) அம்மலக்கு ( வாழத்துக் ) கூறினார்.

பின்னர் அவ்வழுக்கைத் தலையுடையவரிடம் அம்மலக்கு வந்து உமக்கு மிக உவப்பானது எது என்று வினவினார்?

அதற்கவர் மக்கள் என்னை வெறுக்கும் இவ்வழுக்கை என்னை விட்டுப் போய்விட வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே, அவரது வழுக்கை அவரை விட்டுப் போய் விட்டது. அழகிய தலைமுடி அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது ? என வினவினார். அவர் பசுமாடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினைப் பசுமாடு வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத்(அபிவிருத்தி)வழங்குவானாக! என அவருக்கு அம்மலக்கு வாழத்துக் கூறினார்.

பின்னர் குருடரிடம் அம்மலக்கு உமக்கு மிக உவப்பானது எது ? என வினவினார் அல்லாஹ் எனக்கு கண்ணொளி வழங்கி அதன் மூலம் நான் மக்களைப் பார்க்க வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே அல்லாஹ் அவருக்கு கண்ணொளி வழங்கினான். பின்னர் அம்மலக்கு அவரிடம் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என வினவினார். அதற்கவர் ஆடு எனக்கூறவே அவருக்கு ஒரு சினை ஆடு வழங்கப் பட்டது. அல்லாஹ் உமக்கு பரகத் (அபிவிருத்தி ) அருள்வானாக ! என அம்மலக்கு வாழ்த்துக் கூறினார்

மூவருக்கும் அருளிய அவர்களுடைய கால் நடைகள் குட்டி போட்டன. முதலாமவருக்கு ஒட்டக மந்தையும், இரண்டாமவருக்கு மாட்டுப்பண்ணையும், மூன்றாமவருக்கு ஆட்டுமந்தையும் உருவானது.

பிரிதொரு காலத்தில் ஒரு நாள் . . .
பின்னர் அம்மலக்கு வெண்தோல் நோயுடையவராக இருந்தவரிடம் வெண்தோல் நோயுடையவர் தோற்றத்தில் வந்து, நான் ஓர் ஏழை மனிதன் எனது பிரயாணத்தில் எனது பொருட்கள் தீர்ந்து விட்டன. இப்பொழுது எனக்கு இங்கே அல்லாஹ்வையும் உம்மையுமல்லாது எனக்கு வேரு வழியில்லை. ஆகவே உமக்கு அழகிய நிறத்தையும், அழகியதோலையும், பொருட்செல்வங்களையும் வழங்கிய அல்லாஹ்வைக் கொண்டு, உம்மிடம் ஓர் ஒட்டகையை கேட்கிறேன். அதனைக் கொண்டு எமது பயணத்தில் போதுமாக்கி கொள்கிறேன் என்றார்.

அதற்கவர் எனக்கு ஏராளமான கடமைகள் உள்ளது.(அவைகளை நிறைவேற்ற வேண்டி உள்ளதால் உமக்கு ஒட்டகை தரமுடியாது என்றார். அதற்கு அம்மலக்கு நான் உம்மை அறிவேன் நீர் (ஒரு காலத்தில்) மக்கள் வெறுக்கும் வெண்தோல் நோயுடையவராகவும், ஏழையாகவும் இருக்க வில்லையா ? அல்லாஹ் உமக்கு இவைகளை வழங்கினான்.

அதற்கவர் இச்செல்வங்களை என் மூதாதையரிடமிருந்து பரம்பரை வாரிசு சொத்தாகப் பெற்றேன் எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு இக்கூற்றில் நீ பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அவ்வாறே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! எனக் கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு வழுக்கைத் தலையுடையவரிடம் , வழுக்கைத் தலை தோற்றத்தில் வந்து அவரிடம் ( முன்னவரிடம் ) கேட்டது போல கேட்டார்.

அவரும் அவர் பதிலளித்தது போன்றே பதிலளிக்கவே , நீர் உமது கூற்றில் பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அது போன்றே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக ! என அம்மலக்கு கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு குருடரிடம் , குருடர் தோற்றத்தில் வந்து, நான் ஏழை வழிப் போக்கன் பிரயாணத்தில் என் பொருட்கள் தீர்ந்து விட்டன. இன்று எனக்கு அல்லாஹ்வைக்கொண்டும் பின்னர் உம்மைக் கொண்டுமே தவிர வேரு வழியில்லை. அல்லாஹ்வைக்கொண்டு உம்மிடம் ஓர் ஆட்டைக் கேட்கின்றேன். அதைக்கொண்டு எமது பயணத்தை போதுமாக்கி கொள்வேன் என்று கூறவே.

அதற்கவர் நான் குருடனாக இருந்தேன் அல்லாஹ் எனக்கு பார்வையை மீட்டித்தந்தான். (எனது செல்வத்தில்) நீர் விரும்புபவைகளை எடுத்துக் கொண்டு மீதியை விட்டுச்செல்லும் ! நீ எடுத்துக் கொள்ளும் பொருளை அல்லாஹ்வுக்காக இன்று உமக்கு அளிக்கத் தயங்க மாட்டேன். எனக்கூறினார்.

அதற்கு அம்மலக்கு உம் செல்வங்களை உம்மிடமே வைத்துக் கொள்வீராக ! நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள் ( அதில் ) அல்லாஹ் உம்மை பொருந்தி கொண்டான் உம் மற்ற இரு தோழர்கள் மீதும் அல்லாஹ் கோபமடைந்து விட்;டான் எனக்கூறினார் - நூல் : புகாரி , முஸ்லிம்


மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவதென்ன ? மேற்கானும் நபிமொழி நமக்கு உணர்த்துவது யாதெனில். நாம் தமக்குத் தேவையானவைகளை மிக பவ்வியமாக அல்லாஹ்விடம் கேட்டுப்பெறுகிறோம். அல்லாஹ்வும் நமது தேவைகளை அறிந்து அதற்கொப்ப அல்லது அதைவிட அதிகமாகத் தந்து மகிழ்கிறான். தேவைக்கதிகமாகக் கிடைத்து விட்டால் அவைகளை தாம் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு சம்பாதித்தவைகள் என மனிதன் இருமாப்புக்கொள்ள ஆரம்பித்து விடுகிறான். தான் சம்பாதித்தவைகள் என்கிற சிந்தனைகள் உருவாகும்போது அச்செல்வங்களை தனது கையில் இருகப்பிடித்து வைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற பிற சகோதரனுடைய தேவையைப் பூர்த்தி செய்யத்தயங்கி விடுகிறான். தாம் ஒருகாலத்தில் தனது தேவைக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுது மன்றாடியதை மறந்து விடுகிறான் அல்லாஹ்விடம் நன்றி கெட்டவனாகி விடுகிறான், தான் என்ற மமதைக்கு நிரந்தர சொந்தக்காரனாகி விடுகிறான். தான் என்கிற மமதை உருவானால் ?

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; ''நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்'' என்று கூறினார்கள். 28:76

(அதற்கு அவன்) கூறினான்; ''எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!'' . . . 28:78


காருன் தனக்குக் கிடைத்த செல்வங்களை தன்னுடைய அறிவுத்திறமையால் அடைந்து கொண்டதாக தன்னுடைய கூட்டத்தாரிடம் கூறினான். அதனால் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான் கலை நுனுக்கத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்தாற் போல் எழுப்பிய தனது பங்களாவுக்குள் நுழைய முடியாமல் அதன் நுழைவு வாயிலில் வைத்து அவனையும், அவனது சொகுசு பங்களாவையும் பூமிக்குள் புதையச் செய்து விடுகின்றான்.  

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச்செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. 28:81


நம்மிடம் குவியும் செல்வங்கள் நாம் நம்முடைய அறிவுத் திறமையைக்கொண்டு உருவாக்கியவைகள் எனும் என்னம் எக்காரணம் கொண்டும் நம் மனதில் கடுகளவும் உதிக்கக் கூடாது என்பதற்காக மேற்கானும் காரூனுடைய சம்பவத்தை அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.( நாம் கஸ்ட்டப்பட்டே செல்வங்களை உருவாக்கினாலும் தன்னுடைய உடல் உழைப்பால், அறிவுத் திறமையால் உருவாக்கியது என்று என்னக்கூடாது, பிறரிடமும் அவ்வாறு கூறவும் கூடாது, நாம் உலகில் பலரைக் காண்கின்றோம் அவர்களில் எத்தனையோப் பேர் தங்களது அறிவுத் திமையைக் கொண்டும், உடல் உழைப்பைக் கொண்டும் விடா முயற்சியாக பாடுபடுவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் உழைப்பின் அளவுக்கு செல்வங்களை ஈன்றிடுவதில்லை, இதனால் விரக்தி அடைந்து போனவர்கள் ஏராளமானோரைக் கானலாம் அறிவுத் திறமையால் செல்வங்களை அடைய முடியுமென்றிருந்தால் இன்று உலகில் செல்வந்தர்களே 90 சதவிகிதத்தினராக இருப்பர். இன்று நிலைமை அவ்வாறில்லை 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் ஏழைகளாகவே உள்ளனர் அவர்களில் அதிகமானோர் அறிவாளிகளாகவும் இருப்பர்.

தனது தேவைக்கு அதிகமான செல்வங்களை ஈன்றவர்கள் அவைகளை அல்லாஹ் வழங்கினான், தனது அறிவுத் திறமையால் அடையவில்லை என்று சிந்திக்க வேண்டும், அப்படி சிந்தித்தால் தர்ம சிந்தனை மனதில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். தான் உருவாக்கியவைகள் என்கிற மமதை மனிதனுக்கு ஏற்ப்படுமாயின் அச்செல்வங்கள் குறிப்பிட்ட ஒரு வரையரைக்குள் முடங்கி விடும். இஸ்லாம் கூறும் தர்மமும், சகோதரத்துவமும் முடங்கிப்போய்விடும் இன்று இப்படித்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏழை முஸ்லீம்களும் கையேந்துபவர்களாகி விட்டனர். இங்கே இன்னொரு ஹதீஸைக் குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

மனிதன் என்னுடையது , என்னுடையது என்கிறான். மனிதனே ! நீ உண்டு கழித்தவற்றையும் , உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கிர் (ரழி) நூல் : முஸ்லிம்

மனிதன் இவ்வுலகிற்கு வரும் போது எதைக் கொண்டு வந்தான் என்பதை மிக முக்கியாக கவனிக்க வேண்டும், அதே போல் திரும்பிச் செல்லும் போதும் எதை எடுத்துச் செல்கின்றான் ? என்பதையும் கவனிக்க வேண்டும் வரும் பேர்தும் போகும் போதும் விரித்த வெரும் கை தான். இடைப்பட்ட நாட்களில் உண்டு கழித்தவற்றையும், உடுத்திக் கிழித்தவற்றையும் பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தவற்றையும் தவிர உன்னுடையது என்று ஏதும் உண்டா ? என்று கூறும் நபிமொழியை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். வரும் போதும் கொண்டு வராத, திரும்பி போகும் போதும் எடுத்துச் செல்ல முடியாத இடையில் இறைவனால் கொடுக்கப் பட்ட நம்மைச் சாராத ஒன்றை நம்முடைய அறிவைக் கொண்டு திறமையைக் கொண்டு அடைந்ததாக மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமுண்டோ ? அவ்வாறு இறைவனுடைய மாபெரும் கிருபையால் நமக்கு கிடைக்கப் பெற்றதை நமது சகோதரனுக்கு பங்கிட்டு வழங்கி அவனுடைய சந்தோஷத்தை அடைந்து கொள்ளாதது ஏன் சிந்தித்தால் தெளிவு பெறலாம்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட் கொடைகளில் தான் உண்டு புசித்தது போக மீதியில் சிலதை தனது வாரிசுகளுக்கு ஒதுக்கி விட்டு மீதியை தர்மம் செய்து விடுவது முஸ்லீமுக்கு சிறந்த பண்பாகும். காரூனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை நமக்கு உதாரணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா குர்ஆன் நெடுகிலும் நபிமார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைளையும் பல ஊரார்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் மனிதர்கள் அவைகளை தங்களது இன்றைய வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்வதற்காகவேயன்றி வேறில்லை.

ஆனால் இன்றைய சமுதாயத்தவர்களோ குர்ஆனில் கூறப்படும் சரித்திரச் சான்றுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பொழுது போக்குப் போன்று படித்து விட்டு அதை விட்டு விடுகின்றனர் பெரும்பாலானோர் அவைகளை படிப்பதுமில்லை,

தனக்குகிடைக்கப் பெற்றது இறைவனுடைய அருட்கொடை என்பதை மறந்து விட்டு தன் முயற்சியால், தனது திறமையில் ஈன்றது என்றும், தனது முன்னோர்களுடையது என்றும் கொடுக்க மனமில்லாமல் பொய் சொன்னால் கொடுத்தவற்ற அல்லாஹ் மீண்டும் பறித்துக்கொண்டு பழைய நிலைக்கே திருவோடு தூக்க விட்டு விடுவான் என்பதையே மேற்காணும் அல்லாஹ்வை மறநத பனூஇஸ்ரவேலர்களுடைய சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறான்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: